Sunday, October 29, 2017

துலா ஸ்நானம் பயணம் ஒர் சிறப்பு பார்வை

துலா ஸ்நானம் பயணம் ஒர் சிறப்பு பார்வை..

நானும் எனது நண்பர்களும் இணைந்து திட்டப்படி.

உத்தரமேரூரில் 27.10.2017 அன்று விடியற்காலை துவங்கிய பயணம்.

ஒரு யுகங்கள் கங்கையில் குளித்த பலன் பெற ஒரு நாள் இந்த துலா மாதத்தில் காவேரியில்  ஸ்நானம் செய்தால் சுலபமாக பலன் கிட்டும் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.

மேலும் துலா ஸ்நானம் பற்றிய ஒர் விரிவான கட்டுரையை முகநூலில் எழுதியுள்ளேன் அதனை படிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக்செய்யவும் http://aicomps.blogspot.com/2017/10/blog-post_41.html

சுமார் மூன்றரை மணிநேர பயணத்தின் முடிவில் ஸ்ரீ ரங்கம் வந்தடைந்தோம் அம்மா மண்டபம் அருகில் காவேரி புண்ணிய நதியில் நீராடியஉடன் அன்றாட வாழ்வின் முக்கியமான நிகழ்வில் ஒன்றான நித்திய கர்மாவை முடித்து விட்டு பின்னர்.

பூலோக வைகுண்டம் என்று சொல்லிய உடன் என் நினைவில் வருகிற பாசுரம்.

(பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சமேத ரங்கநாயகி தாயார் சன்னதியில் நண்பர்கள் உதவியுடன் மிக அற்புதமான சேவை.

என் மரியாதைக்குறிய அன்பு  சகோதரர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான வடக்கு நோக்கிய திசையில் எழுந்தருளி இருக்கும் கேட்டதை கேட்டஉடன் அள்ளித்தரும் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருகோவில் தரிசனம்.

திருச்சியிலிருந்து குருவாயூர் செல்லும் வழியில், திண்டுக்கலில் என் தந்தையின்  நண்பர் திரு. இலங்கோவன் அவர்களுடன் ஒர் சந்திப்பு. (இவர்களின் சந்திப்பு சுமார் 30ஆண்டுகாலத்திற்கு பிறகு நடந்தது. இரு நண்பர்களின் மலரும் நினைவுகள் அவர்களை மட்டுமல்ல, எங்களையும் மகிழ்வித்தது. கண் கலங்கவும் வைத்தது)

அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் மலை கோயில் கோபுர தரிசனம். பழனியில் சிறப்பாக கருதப்படுகிற ஐயர் திருப்பூர் லாட்ஜ் என்று அழைக்கப்படும் இடத்தில் மதிய உணவு முடித்து.

என் சகோதரர் திரு.வரதன் அவர்கள் வழிகாட்டுதலின் படி ஆனைமலை மாசாணி அம்மன் சன்னதியில் மிக பிரம்மாண்ட தரிசனம் மட்டுமல்ல அம்மனும் தான்.

(ராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் காலத்தில் பராசக்தி இருப்பதாக கருதினர், இந்த பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த அருள் மழைப்பொழிவள் என்பது உண்மை. It is said that that Lord Sri Rama on His way to Lanka to rescue Mother Sita came to know that Sri Masaniamman representing Parasakti was here. He made an idol of the mother with the sand available in the crematorium and worshipped. He made it in the reclining form.)

அங்கிருந்து புறப்பட்டு சற்றும் எதிர்பாராத விதமாக அமைந்த பயணம் ஸ்ரீ பல்லச்சேனா மீன்குளத்தி அம்மன் கோயிலில் (ஒர் பக்தரின் வேண்டுதலை ஏற்ற ஸ்ரீ மதுரை மீனாட்சிஅம்மன் அந்த பக்தரின் குடையின் மீது எரி இங்கு வந்து காட்சி தந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது)

எனது நண்பன் திரு. சிவகுமார் அவர்கள் ஏற்பாட்டில் அவருடைய குலதெய்வ கோவிலில் பல்லச்சேனா மீன்குளத்தி அம்மனிடம் இரவு சிறப்பு வழிபாடு மிகவும் அற்புதமாக நடந்து முடிந்தது.

பல்லச்சேனா ஊரில் அமைந்துள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவு முடித்தோம்.

அங்கிருந்து புறப்பட்டு  நாங்கள்  கேரள மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்கல் மலைப்பகுதி என்பதாலும் மற்றும் 4way road's என்று அழைக்கப்படும் சாலைகள் இல்லாத காரணங்களால், எங்கள் பயணம் மிகவும் நீண்டதாக இருந்தது. இருப்பினும் நீண்ட பயணத்தின் முடிவில் குருவாயூர் வந்து அடைந்தோம். (இரவு 10.30)

மறு நாள்காலை (28.10.2017) என் மனைவியின் தோழி திருமதி. சிவகாமி சிவக்குமார் அவர்கள் உதவியுடன் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதி முன்பு நாங்கள்,

இறைவனை காண கண் கோடி வேண்டும் என்பது பழமொழி,
அது வெறும் பழமொழி இல்லை இறைவன் வாக்கு என்பதை முதல் முறையாக உணர்ந்தேன்,

சிறிதும் எதிர்பாராத விதமாக அமைந்த திவ்விய தரிசனம் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவுகள் என்பது உண்மை.

குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ள வடமேற்கு திசையில் எழுந்தருளி இருக்கும் மம்மீயூர் மாதவனை (சிவ விஷ்ணு சன்னதி) தரிசனம் செய்து முடித்தால் மட்டுமே குருவாயூரப்பன் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது மகான்களின் வாக்கு.

அடுத்து மகாபாரதத்தில் பஞ்ச  பாண்டவர்களுக்கு துனை நின்று அர்ஜுனனுக்கு தேர்  ஓட்டிய பார்த்தசாரதி திருக்கோயில் அற்புதமான தரிசனம்,

அந்த கோவிலின் அமைப்பு பார்த்தால் தேர் போன்று உள்ளது அதன் நடுவில் அமர்ந்த நிலையில் கண்ணபிரான் பார்த்தசாரதியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மற்றும் ஒரு இடம் கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் குருவாயூரில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சமேத பத்மாவதி பகவதி தாயார் தரிசனம் கிடைக்க பெற்றது.

பிறகு அங்கு என் நண்பனின் ஏற்பாட்டில் மிகவும் அற்புதமான கேரள நாட்டு மறக்கமுடியாத மிகவும் சுவையான மதிய உணவை உண்டு மகிழ்ந்தோம்.

உண்ட மயக்கம் கொண்டிருக்கும் உண்டு என்பது பழமொழி சிறிதுக்கு பின் hotelலை checkout செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நாங்கள்

சுமார் 4 மணி நேர பயணத்துக்கு பின் அவினாசி வந்தடைந்தோம் அங்கு உள்ள சிவ ஸ்தலம் அருள் மிகு அவினாசி லிங்கேஷ்வரர் சமேத கருணாம்பிகை  கோவில் தரிசனம் முடித்து,

சனிக்கிழமை தினமாக அமைந்தால் திருப்பூர் திருப்பதி என்று அழைக்கப்படும் வேங்கடாசலபதி கோயில் தரிசனம் கண்டு தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில்...

உத்தரமேரூரை நோக்கி...

பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது ஆச்சார்யனுக்கு என் முதல் வணக்கங்கள்.

மற்றும் எங்கள் பயணத்துக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இருகரம் கூப்பி கோடானு கோடி நன்றிகள்.

என்றும் பயணர்கள் முடிவதில்லை தொடரும்..

உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்

குறிப்பு :- உத்தரமேரூரில் துவங்கி ஸ்ரீ ரங்கம், உறையூர், திண்டுக்கல், பழனி, ஆனைமலை, பல்லச்சேனா, குருவாயூர், அவினாசி, திருப்பூர், மீண்டும் உத்தரமேரூர் வந்தடைய எடுத்துக்கொண்டு பயணத்துக்கான நேரம் மற்றும் Distances என்று செல்லக்கூடிய கிலேமீட்டர் என்று பார்த்தால் சுமார் 1350KM , மொத்த  பயணநேரம் 47 Hrs...

#NHAI #xylo #47hrs #1350kmங #mahindra_and_mahindra #driver_gopy  #நண்பர்கள் #kerala_govt #mylife #facebook #புலி #CV #rajesh #kozhi #twitter #android #BSNL #AIRTEL #android_app #இளையராஜ_இசை
#ARR #Google #Googlemaps #seenu_police #hiway_hotels #a2b

No comments:

Post a Comment