Sunday, November 26, 2017

அயோத்தி ராமரின் உண்மையான வரலாறு

அயோத்தி ராமரின் உண்மையான வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------
இந்துக்களின் புனித தலமாக விளங்கும் மிகவும் முக்கியமான ஏழு நகரம் அவை அனைத்தும் முக்தி தரும் ஸ்தலங்கள்.

அவற்றில் ஒவ்வொன்றும் ஸ்ரீமான் நாராயணனின் அடையாளங்களாக அறியப்படுகிறது

அவந்திகா பெருமாளின் திருவடியாகவும்,

காஞ்சி இடுப்பு பகுதியாகவும்,

துவாரகா நாபி பகுதியாகவும்,

மாயா மார்புப்பகுதியாகவும்,

மதுரா கழுத்து பகுதியாகவும்,

காசி மூக்கு பகுதியாகவும்

மற்றும் முக்கியமான தலை பகுதி அயோத்தியாவாக கருதப்படுகிறது.

ராமர் முதலில் நாம் மானிட ஜென்மம் எடுத்தால் அந்த அவதாரத்திர்க்கு தனி சிறப்பு உண்டு இதை நாம் நன்கு அறிவோம்.

நாம் சனாதானா தர்மத்தின் படி மேற்குறிப்பிட்ட அனைத்து நகரங்களிலும் இந்துக்களின் முக்கியமான வழிபாட்டு தலங்களில் இருக்கிறது.

இந்த ஸ்தலத்தில் ஐந்து ஆழ்வார்கள் மொத்தம் 13 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

நம் ஆழ்வார், பொரியாழ்வார், தொன்டரடிபொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், மற்றும் திருமலையில் படியாய் கிடந்தேனே என்று மங்களாசாசனம் செய்த குலசேகர ஆழ்வார்.

இதுவே வரலாற்றில் மிக பெரிய சாட்சியாக திகழ்கிறது ராமர் கோயில் அங்குதான் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

முகமதியர்கள் படையெடுப்பை பற்றி நாம் அறியாத பல மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டு. அதற்கு ஓர் சிறந்த உதாரணம் பாபர் ( நாம் இந்திய வரலாற்றில் இவரைப்பற்றி சிறப்பாக படித்திருக்கிறோம் ஆனால் அது உண்மை இல்லை)

கிபி.1528-ம் ஆண்டு மார்ச் இறுதியில் அயோத்தி வந்த பாபர் நகருக்கு வெளியே முகாமிட்டிருந்தார்.

அப்போது தான் அவர் தன்னுடைய தளபதி மீர் பாகியிடம் ராமர் பிறந்த இடமான( ஜன்மஸ்தான்) ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அதே இடத்தில் மசூதி கட்ட உத்தரவிட்டுள்ளார்.

இப்படித் தாங்கள் செல்லும் இடங்களிலும், வெல்லும் இடங்களிலும் மசூதிகளைக் கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

(இதற்கு ஆதாரமாக இருந்த பாபரின் தினசரி நாட்குறிப்பான 'பாபர் நாமா' வில் சரியாக 1528 ஏப்ரல் 2 முதல் செப்டம்பர் 18 வரை 5 மாதங்கள் வரையான குறிப்புகள் பின்னாளில் காணாமல் போய் விட்டது.)

பின்னர் 1530-ல் பாபர் இறந்தவுடன் ராமர் கோவில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று எண்ணிய அயோத்தி நகர இந்துக்கள், மசூதி மீதும், மசூதி பொறுப்பாளர்கள் மீதும் ஹுமாயுன்,அக்பர், ஔரங்கசீப் காலத்திலேயே 30 க்கும் மேற்பட்டமுறை தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த சண்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் தியாகம் செய்தது நாம் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சமாதான ஏற்பாடாக 1883 -ல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபடுவதற்கு 'ராம் சபூதரா' என்கிற ஒரு தற்காலிக பீடம் அமைக்கப்பட்டது.
(இந்த கொடுமையை பாருங்கள்)

பின்னர் 1885-ல் மஹந்த் ரகுவர் தாஸ் என்பவர் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ராமர் அவதரித்த இடத்தில் இருந்த ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது.

எனவே அந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு ஆலயம் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி F.E.A கௌமியர் 'இந்துக்களுக்கு சொந்தமான புண்ணிய பூமியில் மசூதி கட்டப்பட்டது வருத்தத்திற்கு உரியது.

ஆனால் இது 356 வருடத்திற்கு முந்தைய சம்பவம். இப்போது சரி செய்வதற்கான காலம் கடந்து விட்டது' என்று தீர்ப்பளித்துள்ளார்.

பின்னர் பல்வேறு கலவரங்கள்,தாக்குதல்களால் சேதமடைந்ததால் மசூதி 1934- ஆம் ஆண்டு முதல் மூடி வைக்கப்பட்டதுடன், தொழுகையும் நடைபெறவில்லை.

பின்பு 1949 டிசம்பர் 22 -ஆம் தேதி நள்ளிரவில் உள்ளூர் இந்துக்கள் ஆயிரக் கணக்கானோர் திரண்டு 'ராம் சபூதரா பகுதியில் இருந்த ராமர், சீதா தேவி, லஷ்மணன் சிலைகளை மசூதியின் மையப் பகுதியில் நிறுவியுள்ளனர்.

பின்னர் 1949 டிசம்பர் 29-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப் படி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப் பட்டு, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு, இரும்புகம்பிகளால் வேலி அமைக்கப் பட்டது.

ஆனால் வேலிக்கு வெளியே நின்று ராமர் சிலையை இந்துக்கள் வழிபடவும்,பூஜைகள் செய்யவும் அனுமதிக்கப் பட்டனர். ராமர் சிலைக்கு பூஜை செய்ய ஒரே ஒரு பூஜாரியை மசூதிக்குள் அனுமதிக்கவும் வழி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பின்னர் 1992 டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் 464 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பாழடைந்த கட்டிடம் தரைமட்டமாக்கப் பட்டது.

நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை ஆராய்ந்தால் ராமர் கோவில் பிரச்சனை இன்று, நேற்றோ இல்லை முகலாயர் காலத்தில் ஏற்பட்டது என்று தெளிவாக தெரிகிறது.

படிப்படியான நிகழ்வுகளை சரித்திரப் பின்னணியில் நோக்கும் போது நிச்சயமாக ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் எழும்பும் என்கிற நம்பிக்கை மலர்கிறது.

ஜெய் சீதாராம்.. ஜெய் ஸ்ரீ ராம்...

உங்கள்
உத்_தும்பிக்கை_நண்பன்...ன்

No comments:

Post a Comment