#ஐப்பசிபவுர்னமி_அன்னாபிஷேகம்
ஐப்பசி துலா மாதம் என்றாலே தீபாவளி, கந்த சஷ்டி, உத்தான ஏகாதசி மற்றும் துலா ஸ்நானம் தான் பலருக்கு ஞாபகம் வரும் ஆனால் மற்றும் ஒர் சிறப்பு உண்டு ஐப்பசிமாத பவுர்னமியில் வரும் அன்னாபபிஷேகம் தான்.
"கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன்".
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர்.
அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன.
இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன.
ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிஷதங்கள்.
எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபடுவதுபோல ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்ன பிரசாதம் செய்து அதை சிவனுக்கு முழுமையாக சாத்துவது இந்த வேதங்களில் ஒளிந்து உள்ள உண்மை.
சிவாலயங்களிள் நடைபெரும் அன்னாபிஷேகம்..!! நமது சனதான தர்மத்தின் படி யாரும் பசித்திருக்கக் கூடாது எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில், அன்னாபிஷேக செய்து பின் அன்னதானம்.
போதும் என மனித மனம் திருப்திஅடைவது உணவில் மட்டுமே..!!
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும்
வாய்ப்பு கிடைத்தவர்கள் அன்னத்துக்குக் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது உண்மை.
பொதுவாக பலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும் பசி இருக்கும் ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது..!!
இப்படிப்பட்டவர்கள் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த அன்ன பிரசாதத்தை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்..!!
நீண்ட நாடளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள்... அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும்.
அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும், தன் நம்பிக்கையும் கை வரப் பெறும்.
அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
ஒருவன் எவ்வளவு பெரிய தானதர்மங்களைச் செய்தாலும் கூட அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்..!!
அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும் அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் நமது சனதான தர்மம் உணர்த்துகிறது..!!
நீங்களும் அருகில் உள்ள சிவ ஆலையங்களுக்கு சென்று அன்னாபிஷேகம்தில் கலந்துகொண்டு இறை அருள்பெருக வாழ்த்துக்கள்.
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ ...
உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்
No comments:
Post a Comment